tag:blogger.com,1999:blog-2365967982580908276.post3056735858066644333..comments2023-09-11T07:50:43.504-07:00Comments on ஹஜ் விளக்கம்: என் ஹஜ் பயண அனுபவங்கள் - 21SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2365967982580908276.post-25781730391810238202009-03-19T13:21:00.000-07:002009-03-19T13:21:00.000-07:00உங்கள் நிலையை வாசித்ததும் எனக்கே கோபம் வருகின்றது....உங்கள் நிலையை வாசித்ததும் எனக்கே கோபம் வருகின்றது. அப்படியென்றால் அவ்விடத்தில் நீங்கள் எவ்வளவு தூரம் கோபப் பட்டிருப்பீர்கள் என்று என்னால் நன்கு உணர முடிகின்றது. நானும் வெளியில் சென்றால் மற்றவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து செல்வதை/ஏதாவது காரியம் முடிப்பதை கூடுதலாகத் தவிர்த்துக் கொள்வேன். அதன் மூலம் நிறைய அலைச்சல்களைத் தவிர்த்திருக்கின்றோம். இதனால் எனக்கும் என் கணவருக்கும் இடையில் நிறையக் குழப்பங்கள் வரும் பின் கூட்டாகச் சென்றவர்கள் அனுபவித்திருக்கும் அலைச்சல்களைக் கேட்டதும் என்னைப் பாராட்டுவார். எனக்குத் துளி கூடப் பொறுமை இல்லை (ஒரு பெண்ணுக்கு முக்கியமான ஒன்று.) ஆனால் திருமணத்தின் பின் கொஞ்சம் மாறியுள்ளேன்.<BR/><BR/>பல அலைச்சல்கள், அமைதியின்மைகளின் பின் தான் பல முக்கியமான காரியங்கள் நிறைவேறுகின்றன. இவை எல்லாம் இறைவன் எங்களுக்குத் தரும் சோதனைகள். பல சோதனைகள், அலைச்சல்களைக் கொடுத்துக் கடைசி நிமிடத்தில் நாமே எதிர்பார்க்கா வண்ணம் தன் விருப்பத்தை/எம் கடமைகளை நிறைவேற்றி வைப்பான். இது நான் என் வாழ்நாளில் அடிக்கடி அனுபவிக்கும் ஒன்று. எந்த ஒரு சிறு காரியமாக இருக்கட்டும் அல்லது பெரிய காரியங்களாக இருக்கட்டும் என்னை அலைய வைத்து, கோபப் பட வைத்து, அழ வைத்து "இனி என்னால் முடியவில்லையே இறைவா" என்று கெஞ்ச வைத்துப் பின் நான் எதிர் பார்க்காத சமயம் பார்த்து என் தேவையை நிறைவேற்றி வைப்பான். இது எல்லாம் அவனை நாம் விடாமல் நம்புகின்றோமா என்பதை சோதிப்பதற்காகவே தவிர வேறொன்றுமில்லை.<BR/><BR/>எந்தக் குழப்பம் நேர்ந்தாலும் இறையருளால் நீங்கள் சென்ற காரியத்தை நிறைவேற்றியிருப்பீர்கள் என நம்புகின்றேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>பிருந்தாAnonymousnoreply@blogger.com